ஒட்டன்சத்திரம், நவ.25: ஒட்டன்சத்திரம் அடுத்த ஸ்ரீரங்ககவுண்டன்புதூரை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி துளசிமணி(24).கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த துளசிமணி கடந்த வெள்ளிக்கிழமை தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்தார். இதில் நேற்று முன்தினம் துளசிமணி உயிரிழந்தார்.