ஈரோடு, நவ. 25: தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால் ரூ.147 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும், இதற்காக தண்ணீர் நிறுத்தம் செய்து கொள்ளவும் விவசாயிகள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். கொடிவேரி அணை பாசனதாரர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்க நிர்வாகி சுபி.தளபதி தலைமையில் கோபில் நடந்தது. இக்கூட்டத்தில் கொடிவேரி அணை பாசனத்திற்குட்பட்ட தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால்களை சீரமைத்தல், புதுப்பித்தல் போன்ற பணிகளுக்காக ரூ.147.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது. வாய்க்கால் சீரமைப்பு பணிக்காக ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களுக்கு நீர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் அளிப்பது, ஏப்ரல் இறுதியில் இரண்டாம் போகத்திற்கான நீர் திறப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.