×

ஆண் சிசு சடலம் கால்வாயில் மீட்பு கீழ்பென்னாத்தூரில் பரபரப்பு பிறந்து சில மணி நேரத்தில் வீச்சு

கீழ்பென்னாத்தூர், நவ.25: கீழ்பென்னாத்தூரில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசுவின் சடலத்தை கழிவுநீர் கால்வாயில் வீசிச்சென்றுள்ளனர். இதுகுறித்து ஏஎஸ்பி கிரண்ஸ்ருதி விசாரணை நடத்தினார். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் உழவர் சந்தை எதிரே நேற்று, பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசுவின் சடலம் கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்டு கிடந்தது. அங்கு சுற்றித்திரிந்து கொண்டிருந்த நாய்கள் சடலத்தை இழுத்து தரதரவென சென்றன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டிவிட்டு, சடலத்தை மீட்டனர். உடனடியாக கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், ஏஎஸ்பி கிரண்ஸ்ருதி, டிஎஸ்பி(பயிற்சி) அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சடலத்தை மீட்டு அருகில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து, கால்வாயில் வீசப்பட்ட குழந்தை யாருடையது?, குழந்தை இறந்து பிறந்ததால் வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கீழ்பென்னாத்தூரில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : birth ,Lower Pennathur ,
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா