திருச்சி, நவ. 24: திருச்சியில் 500 ரூபாய்க்கு சில்லறை கேட்பது போல் நடித்து காய்கறி விற்கும் பெண்ணிடம் பணப்பையை பறித்தவர் கைது செய்யப்பட்டார். திருச்சி பீமநகர் யானை கட்டி மைதானத்தில் ஏராளமான காய்கறி கடைகள் உள்ளது. இங்கு இதே பகுதியை சேர்ந்த ஜெயமேரி(43) என்பவர் காய்கறி கடை வைத்துள்ளார். இவர் கடந்த 19ம் தேதி மைதானத்தில் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆண் ஒருவர் 500 ரூபாய்க்கு சில்லறை கேட்டுள்ளார். ஜெயமேரியும் சில்லறை கொடுக்க தனது சுருக்கு பையிலிருந்து பணத்தை எடுத்து எண்ணிக்கொண்டிருந்தார். அப்போது அவர் சுருக்கு பையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். அதில் ரூ.30 ஆயிரம் ரொக்கம் இருந்துள்ளது.