×

டிச.25ல் சொர்க்கவாசல் திறப்பு

திருச்சி, நவ. 24: டெல்லியில் வரும் 26, 27ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது. 15 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து 500 விவசாயிகள் இன்று காலை (24ம் தேதி) ரயிலில் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் வரும் 26, 27ம் தேதிகளில் இந்திய விவசாயிகள் சார்பில் போராடடம் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப், அரியானா, குஜராத், டெல்லி உள்பட 15க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள்இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 500 விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதையொட்டி திருச்சியிலிருந்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று காலை 7 மணியளவில் வைகை எக்ஸ்பிரஸில் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். இது குறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், டெல்லியில் வரும் 26, 27ல் போராட்டம் நடைபெறுகிறது.

இதில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து 500 பேர் கலந்துகொள்கிறோம். இதன் தொடர்ச்சியாக கடந்த மக்களவை தேர்தலின்போது, சிறு, குறு விவசாயிகள் போன்று பெரிய விவசாயிகளுக்கும் ரூ.6 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும். கோதாவரி, காவிரி, குண்டாறு, மேல்வைப்பாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும், விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லாத கடன் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் அவரது வீட்டு முன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். முன்னதாக திருச்சியில் இருந்து செல்லும் 150 விவசாயிகளும் பாதி தலையை மொட்டை அடித்து செல்ல உள்ளோம் என்றார்.

Tags : Heaven's Gate ,
× RELATED திருப்பதியில் நாளை முதல் இலவச சர்வ...