திருச்சி, நவ.24: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் வாட்சப் செயலி மூலம் 351 மனுக்கள் பெறப்பட்டது. குறைதீர்க்கும் நாளில் வாட்சப் செயலி மூலம் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும் நிலம் தொடர்பான 98 மனுக்களும், குடும்ப அட்டை உள்பட 351 மனுக்கள் வாட்ஸ்அப் செயலி மூலம் பெறப்பட்டது. இம்மனுக்களை உடனடியாக விசாரிக்க கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.