மாலை அணிவித்து மரியாதை நடத்தையில் சந்தேகம் மனைவி அடித்து கொலை

தஞ்சை, நவ. 24: தஞ்சை அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த போதை கணவர் நேற்று கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் தெக்கூர் காசாநாடுபுதூர் பகுதியை சேர்ந்தவர் வில்லியப்பன்(55). மெஸ் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி இளஞ்சியம் (45). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் வௌிநாட்டில் வேலை பார்க்கிறார். மது பழக்கம் உள்ள வில்லியப்பன், மனைவி இளஞ்சியத்தின் மீது சந்தேகப்படுவாராம். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த வில்லியப்பனுக்கும், அவரது மனைவிக்கும் இடயே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வில்லியப்பன், மனைவியின் தலையில் கட்டையால் தாக்கினார்.

இதில் சம்பவ இடத்திலேயே இளஞ்சியம் இறந்தார். தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து வில்லியப்பனை கைது செய்தனர்.

Related Stories: