தஞ்சை, நவ. 24: தஞ்சை அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த போதை கணவர் நேற்று கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் தெக்கூர் காசாநாடுபுதூர் பகுதியை சேர்ந்தவர் வில்லியப்பன்(55). மெஸ் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி இளஞ்சியம் (45). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் வௌிநாட்டில் வேலை பார்க்கிறார். மது பழக்கம் உள்ள வில்லியப்பன், மனைவி இளஞ்சியத்தின் மீது சந்தேகப்படுவாராம். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.