×

புயல் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

புதுக்கோட்டை, நவ.24:புயல் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவசமாக கண் பரிசோதனை செய்து கண் குறைபாடு உள்ளவர்களுக்கு விலையில்லா கண் கண்ணாடிகளை வழங்கும் முகாம்கள் நடைபெற்று வருகிறது. அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் விலையில்லா கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு கண்ணாடிகளை அவரே அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் கண் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு கண் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வரவுள்ள புயலை எதிர்கொள்ள தமிழக முதல்வர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த கஜா புயலின் போது முதல்வர் எடுத்த நடவடிக்கையால் பல்வேறு சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று எதிர்வரும் புயலை எதிர்கொள்ள வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் ஒருங்கிணைத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையோடு இணைந்து மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எதையும் எதிர் கொள்வதற்கு தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. புயல் குறித்த அச்சம் எச்சரிக்கை பொதுமக்களுக்கு அவசியம் தேவை. புயல்குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Tags : Minister of Health ,
× RELATED சொத்து குவிப்பு வழக்கு:...