×

தா.பழூர் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

தா.பழூர், நவ. 24: தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. தா.பழுர் ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் 2020- 2021ம் கல்வியாண்டுக்கான பள்ளி செல்லா குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி கடந்த 21ம் தேதி முதல் துவங்கி நடைபெறுகிறது. தா.பழுர் மெயின் ரோடு, தோப்புத்தெரு, காலணி தெரு ஆகிய பகுதிகளில் இருந்து பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கண்டறியும் பணி வட்டார கல்வி அலுவலர் ராசாத்தியம்மாள் முன்னிலையில் மேற்பார்வையாளர் மோகன் தலைமையில் நடந்தது. இந்த கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் மேகநாதன், சுந்தரவள்ளி, இளவழகன், ரவிச்சந்திரன், கண்ணதாசன், சம்பத் மற்றும் சிறப்பாசிரியர்கள் சகாயம், சோபியா, சித்ரா, ஆப்ரகாம் சில்வர்-ஸ்டர் இயன்முறை மருத்துவர் வினோத் கண்ணா ஆகியோர் ஈடுபட்டனர்.

Tags : children ,school ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...