×

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சீர்காழியில் மீட்பு பணிக்கு 5 தனிப்படை நியமனம்

சீர்காழி, நவ.24: சீர்காழி காவல் நிலையத்திற்கு மயிலாடுதுறை எஸ்பி  நாதா நேற்று வருகை தந்து நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணியில் ஈடுபட 5 தனிப்படைகளை நியமித்தார். ஒவ்வொரு தனி படைக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 36 காவலர்கள் செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படைகள் சீர்காழி, மயிலாடுதுறை, கொள்ளிடம், புதுப்பட்டினம், பூம்புகார் ஆகிய பகுதிகளில் தங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் ஈடுபட்டு பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். மீட்பு பணியில் ஈடுபடும் தனி படையினருக்கு ஜெனரேட்டர் மற்றும் மீட்பு பணி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Tags : personnel ,Sirkazhi ,
× RELATED சத்தீஸ்கரில் நடந்த என்கவுண்டரில் 29 நக்சல்கள் சுட்டுக்கொலை..!!