×

திருவில்லி.யில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்திற்கு எம்எல்ஏ நிவாரண உதவி

திருவில்லிபுத்தூர், நவ. 24: திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்திருக்கும் அத்திதுண்டு பேய் மலையான் ஓடையில் கடந்த 2  நாட்களுக்கு முன்பு குளிக்க சென்ற கோட்டைப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபிசங்கர், பால்பாண்டி, முத்தீஸ்வரன் ஆகியோர் நீரின் வேகத்தை தாங்க முடியாததால் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் இறந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இறந்த 3 இளைஞர்களின் குடும்பத்திற்கு அதிமுக எம்எல்ஏ சந்திரபிரபா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து தனது சொந்த பணத்தில் இருந்து நிவாரண உதவி வழங்கினார். மேலும்  முதலமைச்சர் நிவாரண உதவித்தொகை கிடைக்க ஆவண செய்துள்ளார். உடன் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா, மாவட்ட கவுன்சிலர் கணேசன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் அய்யனார் உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags : MLA ,families ,Srivilliputhur ,floods ,
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்