×

ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் திருப்பாலைக்குடி மக்கள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம், நவ.24:  திருப்பாலைக்குடியில் ரேசன் கடைக்கு தனி கட்டிடம் இல்லாததால் அங்குள்ள விவசாயிகள் நல சங்க கட்டிடத்தில் கடை இயங்கி வருகின்றது. இதனை விவசாய சங்கத்தினர் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் உள்ள கடை எண் 1 என்ற ரேசன் கடை மூலம் பழங்கோட்டை, மந்தனார்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கடை ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசு கட்டிடம் பழுதடைந்ததை தொடர்ந்து அங்குள்ள ரேசன் பொருட்களை பாதுகாக்கும் விதமாக திருப்பாலைக்குடி விவசாய சங்க கட்டி
டத்தில் வைத்து பயனாளிகளுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது விவசாய பணிகள் துவங்கியுள்ள நிலையில், விவசாயிகள் கண்மாய் நீரிணை பயன்படுத்துவது குறித்தும், விவசாய பணிகள் குறித்தும் அவப்போது ஆலோசனை செய்வதற்கும் கட்டப்பட்ட கட்டிடத்தில் தற்போது ரேசன் கடை செயல்பட்டு வருவதால், விவசாயிகளுக்கு இடம் இல்லாத நிலை ஏற்பட்டு அவர்கள் கலந்தாய்வு கூட்டங்களை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே இதற்கு சரியான தீர்வு காணும் வகையில்  சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டி தரும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : building ,Tiruppalaikudi ,
× RELATED கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி