×

போகலூர் அலுவலகத்தில் அனுமதியின்றி பிரதமர் மோடி படம் பாஜகவினர் போராட்டத்தால் பரபரப்பு

பரமக்குடி, நவ.24:  பரமக்குடி அருகே போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனுமதியின்றி,  பிரதமர் மோடியின் படம் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பரமக்குடி தாலுகா போகலூரில்  ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களாக  இரண்டு பாஜகவினர் உள்ளனர். இந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்,  பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என கோரி,  பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் ஆகியோர் தலைமையில் பாஜகவினர்  ஆணையர் ராஜகோபாலிடம் வலியுறுத்தினர். கலெக்டரிடம் இருந்து  முறையான அனுமதி கடிதம் வந்த பிறகு, படம் வைப்பதற்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்தார்.

இதற்கு, கண்டனம் தெரிவித்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கண்டன கோஷங்களையும் எழுப்பினர். பின்னர் அலுவலக நுழைவு வாயிலில் பிரதமர் மோடியின் படத்தை அனுமதியின்றி  மாட்டிவிட்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஆணையர்  கூறும்போது, ‘‘பிரதமர் மோடியின் படத்தை யூனியன் அலுவலகத்தில் மாட்டவேண்டும் என கேட்டனர். அதற்கு, கலெக்டரிடம் அனுமதி பெற்று போட்டோவை வைக்கலாம் என தெரிவித்து இருக்கிறேன். மேலும் அவர்களாக போட்டோவை  மாட்டி  விட்டு சென்ற விவகாரம் பற்றி கலெக்டரிடம் தெரிவிக்க பட்டுள்ளதாக கூறினார்.

Tags : Modi ,office ,Pokalur ,protest ,BJP ,
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...