சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம்

மதுரை, நவ. 24: சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம், மதுரையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி ஜெயராஜராஜேஸ்வரன் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். திண்டுக்கல் பிடரிக் ஏங்கல்ஸ் சிறப்புரையாற்றினார். வரும் 25ம் தேதி தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்புவது, வரும் 30ம் தேதி முதல் டிச.2ம் தேதி வரை முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்புவது, வரும் 29ம் தேதி மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: