×

உதயநிதி ஸ்டாலின் தொடர் கைது கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் மூர்த்தி எம்எல்ஏ எச்சரிக்கை

மதுரை, நவ. 24: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடர் கைதை கண்டித்து, வடக்கு மாவட்ட திமுக சார்பில் சாலை மறியல், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அரசுக்கு  மூர்த்தி எம்எல்ஏ எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவதை கண்டித்து மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டச்செயலாளர் பி.மூர்த்தி எம்எல்ஏ தலைமையில்  ஊமச்சிகுளத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச்செயலாளர் பி.மூர்த்தி பேசுகையில், “அதிமுக அரசு இந்த தொடர் கைது நடவடிக்கை போக்கை நிறுத்தாவிட்டால் வடக்கு மாவட்டம் சார்பில் மிகப்பெரிய அளவில் திமுகவினர் சாலை மறியல், சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என எச்சரித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் சோமசுந்தரபாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் வெங்கடேசன், ஒன்றியச்செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள்பங்கேற்றனர்.

Tags : Murthy MLA ,protest ,arrests ,Udayanidhi Stalin ,
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் உணவக...