அரசு பஸ் மோதி முதியவர் பலி

ஒட்டன்சத்திரம், நவ. 24: ஒட்டன்சத்திரம் அடுத்த பொருளூரை சேர்ந்தவர் ராமசாமி (75). இவர் நேற்று முன்தினம் பொருளூர்- கள்ளிமந்தையம் ரோட்டில் தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: