ஒட்டன்சத்திம், நவ. 24: ஒட்டன்சத்திரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமை வகிக்க, மாநில செயலாளர் நெல்லை பைசல், மையது முகமது சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் தமிழகத்தில் 3 1/2 சதவீத இடஒதுக்கீட்டை, 7 சதவீதமாகவும், மத்தியில் 10 சதவீதமாகவும் ஒதுக்கி தர வேண்டும், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் என்பிஆர் கணக்கெடுப்பை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கிளை தலைவர் அப்துல் ரஷீது, செயலாளர் அகமது, பொருளாளர் ஆஷிக் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.