ஒட்டன்சத்திரத்தில் தவ்ஹீத் ஜமாத் செயற்குழு கூட்டம்

ஒட்டன்சத்திம், நவ. 24: ஒட்டன்சத்திரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமை வகிக்க, மாநில செயலாளர் நெல்லை பைசல், மையது முகமது சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் தமிழகத்தில் 3 1/2 சதவீத இடஒதுக்கீட்டை, 7 சதவீதமாகவும், மத்தியில் 10 சதவீதமாகவும் ஒதுக்கி தர வேண்டும், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் என்பிஆர் கணக்கெடுப்பை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கிளை தலைவர் அப்துல் ரஷீது, செயலாளர் அகமது, பொருளாளர் ஆஷிக் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: