×

திருப்பூரில் மேலும் 67 பேருக்கு கொரோனா

திருப்பூர், நவ.24: திருப்பூரில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து நிலையில், மாவட்டம் நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டதில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் தற்போது மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 903 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை மாவட்டத்தில் பலி எண்ணிக்கை  207 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 79 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம், மாவட்டம் முழுவதும் 14,073 பேர் குணமடைந்து வீடு திரும்பி  உள்ளனர். தற்போது, 623 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Corona ,Tirupur ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...