புதுவையில் உயிரிழப்பு ஏதுமில்லை புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரி, நவ. 24: புதுவையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் நேற்று புதிதாக 27 பேருக்கு ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் 2,305 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-25, காரைக்கால்-1, மாகே-1 என மொத்தம் 27 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கொரோனாவால் உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 609 ஆக இருக்கிறது. இறப்பு விகிதம் 1.66 ஆகவும் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 36,718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 217 பேர்  சிகிச்சை பெற்று வரும் நிலையில் வீடுகளில் 310 பேர்  தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 527 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 57 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,582 ஆக (96.91 சதவீதம்) அதிகரித்துள்ளது. இதுவரை 3,84,417 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 3,43,301 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: