கோவில்பட்டி, நவ. 24: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சமுதாய விழிப்புணர்வு மையம் சார்பில் கவுணியன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு மின்சார பாதுகாப்பு மற்றும் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இணையவழியாக நடந்தது. கல்லூரி துணை பேராசிரியர் குமார் வரவேற்றதோடு சமுதாய விழிப்புணர்வு மையத்தின் முக்கியத்துவம் மற்றும் மின்சார சிக்கனம், சேமிப்பு முறைகளை விளக்கினார். மேலும் காற்று, நிலக்கரி, தண்ணீர் போன்றவற்றை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் முறைகளையும், அணுமின் நிலையங்களினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் விரிவாக கூறினார்.