உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து மேலப்பாளையத்தில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 45 பேர் கைது

நெல்லை, நவ. 23: திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மேலப்பாளையத்தில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 45 பேர் கைது செய்யப்பட்டனர். திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மயிலாடுதுறை குத்தாலம் சாலையில் தேர்தல் பிரசாரம் செய்ய சென்றார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அவரை கைது செய்தனர். இதை கண்டித்து மேலப்பாளையத்தில் திமுக இளைஞரணி சார்பில் கட்சியினர் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் வில்சன் மணித்துரை தலைமை வகித்தார். மாநகர அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் சங்கர், பால் மாயாண்டி, மாநகர துணை அமைப்பாளர்கள் ஜபருல்லாகான், மாயா செந்தில்குமார், மேலப்பாளையம் பகுதி அமைப்பாளர் சாலி மவுலானா, துணை அமைப்பாளர்கள் கன்னையா, வேல்மணி, அரபி ஞானியார், இசக்கி கண்ணன், மாநகர மாணவரணி அமைப்பாளர் ரம்ஜான்அலி, தகவல் தொழில்நுட்ப அணி பிஎம்.சரவணன், துணை அமைப்பாளர் இஸ்மாயில், நெசவாளரணி மாவட்ட அமைப்பாளர் துபைசாகுல், மாநகர அமைப்பாளர் அந்தோணி, மாவட்ட துணை அமைப்பாளர் சைபுதீன், மாவட்ட பிரதிநிதி பாதுஷா, பாளை புகாரி, பொதுக்குழு உறுப்பினர் சுடலைக்கண்ணு, நிர்வாகிகள் குச்சி யூசுப், மைதீன், ஹனிபா, வேதமுத்து, 26வது வார்டு செல்வம், அலிசேக் மன்சூர், அகமது பாதுஷா, அசன், கண்ணா, முகைதீன் அப்துல்காதர், முருகன், விஎஸ்டி நசீர் உள்பட பலர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 45 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில்  வைத்தனர்.

Related Stories: