போலீசிடம் இருந்து தப்பியவர்களில் ஒருவர் கைது

தூத்துக்குடி, நவ. 23: தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த சகிலன் மற்றும் குருஸ்புரத்தை சேர்ந்த  டைட்டஸ் ஆகிய இருவர் மீதும் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைத்தில் இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 20ம்தேதி மாலை அரிவாளுடன்  ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விரைந்துசென்ற  வடபாகம் போலீசார், இருவரையும் பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர். ஆனால், இருவரும் இரவில் அங்கியிருந்து தப்பிச்சென்றனர். இதையடுத்து அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், டைட்டஸை நேற்று கைதுசெய்தனர். தலைமறைவான ஷகிலனை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related Stories: