வேலூர், நவ. 23: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள எழுத்தர், மேற்பார்வையாளர், உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வை 317 பேர் எழுதினர். 201 பேர் ஆப்சென்ட் ஆகி உள்ளனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 105 உதவியாளர்களுக்கான பணியிடங்கள் நேரடியாக நியமனம் மூலம் நிரப்பதற்கான எழுத்து தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இத்தேர்வை 444 பேர் எழுதினர். 334 பேர் ஆப்சென்ட ஆகினர். தொடர்ந்து, 2வது நாளாக இதர கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர்கள், எழுத்தர்கள், மேற்பார்வையாளர்கள் என 59 பணியிடங்களுக்கு 518 பேர் விண்ணப்பித்திருந்தனர்.