×

மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று

நாமக்கல், நவ.23: நாமக்கல் மாவட்டத்தில் நேற்று, 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 9,777 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கந்தம்பாளையத்தை சேர்ந்த 58 வயது நபர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவருடன் சேர்த்து, இதுவரை 101 பேர் உயிரிழந்துள்ளனர். 262 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags :
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு