மாவட்ட காவல்துறை புது முயற்சி பொதுமக்கள் மீதான கொரோனா கால வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

திருச்சி, நவ.23: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் நிஜாம், அப்துல் வஹாப் ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்மொகிதீன் நிறைவுரையாற்றினார். இதில் மாவட்ட துணை தலைவர்கள், நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டனர். கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என மற்ற மாநில முதல்வர்கள் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது போல் தமிழக அதிமுக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பொதுமக்கள் மீதான கொரோனா கால வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும், கிடப்பில் போடப்பட்ட திருச்சி ஜங்ஷன் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், காந்தி மார்க்கெட்டை தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்க முதல்வர் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: