×

சீரமைக்க மக்கள் வலியுறுத்தல் உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து திமுக இளைஞர் அணியினர் மறியல்

நீடாமங்கலம், நவ.23: உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலியில் நீடாமங்கலத்தில் இளைஞர் அணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மூன்றாவது நாளாக குத்தாலத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆனந்து தலைமையில் இளைஞரணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீடாமங்கலம் நகர இளைஞரணியை சேர்ந்த காந்திமணி, மாணவர் அணி ராகுல்தாஸ், ஒன்றிய குழுதலைவர் செந்தமிழ்ச்செல்வன், ராசப்பையன் சாவடி விக்னேஷ்குமார், சித்தமல்லி கவியழகன், அஜித்குமார், உள்ளிட்ட 30 பேரை கவல்துறையினர் கைது செய்து மல்லிகை திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூர் கடைத்தெருவில் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து  எம்எல்ஏ ஆடலரசன் தலைமையில் திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது எம்எல்ஏ ஆடலரசன், திமுக கிளை செயலாளர் துரையரசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ராஜா உள்ளிட்ட 30 பேரை எடையூர் போலீசார் கைது செய்தனர்.

Tags : DMK ,youth team protests ,arrest ,Udayanithi Stalin ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி