வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்குதல் முகாம்: கலெக்டர் ஆய்வு

தஞ்சை,நவ.23: தஞ்சை மாவட்டம் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் தாலுகாவில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடா்பாக நடைபெற்ற சிறப்பு முகாம்களை கலெக்டர் கோவிந்தராவ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளவாறு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயர் சோ்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் தொடா்பான சிறப்பு முகாம்கள் நேற்று முன் தினம் மற்றும் நேற்றும் நடைபெற்றது.அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் மாவட்ட கலெக்டர் வெளியிடப்பட்ட மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியலை சரி பார்க்க வேண்டும் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, திருவிடைமருதூர் தாலுகா திருபுவனம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவாடுதுறை ஆதினம் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் தாலுகா உள்ளுர் ஊராட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, தாராசுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாபநாசம் வட்டம் கோவிந்தசாமி மூப்பனார் உயர்நிலைப் பள்ளி, மணி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில்அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடா்பான சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து,பெயா் சோ்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தம் செய்ய வந்த பொது மக்களிடம் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதன் அவசியம் குறித்தும், உரிய விண்ணப்ப படிவங்களை வழங்கினார். அவருடன், கும்பகோணம் ஆர்டிஒ விஜயன், தமிழ்நாடு வாணிப கழக மாவட்ட மேலாளர் அழகர்சாமி, தாசில்தார்கள் பாலசுப்ரமணியன், கண்ணன், முருகவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: