அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்..

தஞ்சை,நவ.23: தஞ்சை மாவட்டம் சுவாமிமலையை சேர்ந்தவர் விக்னேஷ் (26). அதே பகுதியை சேர்ந்தவர் விவேகா (22). பி.காம். பட்டதாரி. இவர்கள் 2 பேரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் 2 பேரும் பதிவு திருமணம் செய்து கொண்டு, அவரவர் வீட்டில் வசித்து வந்தனர். காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே திருவாரூரில் உள்ள அம்மன்கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து இடுவரும் தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது விவேகாவின் பெற்றோர் தங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் இரு வீட்டாரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Related Stories: