இன்றைய மின்தடை

ஸ்ரீவைகுண்டம், நவ.23: ஸ்ரீவைகுண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆழ்வார்திருநகரி 11கேவி மின் தொடரில் குறிப்பிட்ட இடங்களில் பழைய மின் கம்பிகளை அகற்றிவிட்டு புதிய மின் கம்பிகள் அமைக்கும் பணி நடக்கிறது. இதன் காரணமாக புதுக்குடி கீழூர், மேலூர், அனைத்துத் தெருக்கள், வைகுண்டம் யூனியன் அலுவலகம், காவல்நிலையம், பொதுப்பணிதுறை ஆகிய பகுதிகளில் இன்று (23ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. எனவே, பராமரிப்பு பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: