விளாத்திகுளம்,நவ.23: விளாத்திகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்றவரை போலீசார் கைது செய்து 200 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள ராமச்சந்திராபுரம், காடல்குடி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக விளாத்திகுளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து நேற்று முன்தினம் விளாத்திகுளம் எஸ்ஐ கங்கைநாதபாண்டியன் தலைமையில் விளாத்திகுளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது லட்சுமிபுரம் கிராமம் அருகே நின்று கொண்டிருந்தவரிடம் விசாரணை நடத்தினார்.விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் எம்.கரிசல்
குளம் கிராமத்தை சேர்ந்த தவமணி மகன் ராமகிருஷ்ணன் (34) என்பதும், சட்டவிரோதமாக மது விற்பது தெரியவந்தது.இதனையடுத்து ராமகிருஷ்ணனை கைது செய்து 200 மதுபாட்டில்களை விளாத்திகுளம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்