×

நெல்லையில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்

நெல்லை, நவ.23: நெல்லையில் அதிமுக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் கவர்ந்திழுக்கப்பட்ட இளைஞர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்து வருகின்றனர். இதில் நெல்லை  மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 26வது வார்டு பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள், வார்டு தலைவர் செல்வக்குமார், செயலாளர் சிவா, பொருளாளர் சரவணன்,

இளைஞரணி துணைச் செயலாளர் ஜஸ்பர், அதிமுகவைச் சேர்ந்த சாம்சன், சின்னத்துரை, தேவா உள்பட 50 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் திமுக வக்கீல் பிரிவு தினேஷ், பொறியாளரணி சாய், செல்லத்துரை, பாளை தொகுதி இளைஞரணி புஷ்பராஜ், உத்திரநாயகம் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை 26வது வார்டு திமுக நிர்வாகி சாமுவேல் செய்திருந்தார்.

Tags : Nellai ,AIADMK ,DMK ,
× RELATED நெல்லை மக்களவை தொகுதி பாஜ, அதிமுக வேட்பாளர்கள் சொத்து பட்டியல்