நெல்லை,நவ.23: சுரண்டை காமராஜர்நகரை சேர்ந்தவர் பரமசிவன் மகன் திருமலை (13). அங்குள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். சுரண்டை சிவகுருநாதபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த தனுஷ்கோடி மகன் கருப்பசாமி(18). சுரண்டை அரசு கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இருவரும் புதிய பள்ளிவாசல் தென்புறம் பாழடைந்த கோழிப்பண்ணை அருகில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின் வயரில் பட்டு இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மாணவன் திருமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.