நெல்லை, நவ. 23: பாளை மகாராஜநகர் வார்டு அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவுப்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் பாளை மண்டலம் மகாராஜநகர் வார்டு அலுவலகத்தில் நடந்தது. இதில் மருத்துவ அலுவலர் டாக்டர் தமிழரசி, சுகாதார அலுவலர் ஷாகுல்ஹமீது, சுகாதார ஆய்வாளர் நடராஜன், மாநகராட்சி பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.