×

கோடியக்கரையில் இறந்து கரை ஒதுங்கிய கடல் பன்றி

வேதாரண்யம்,நவ.23: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை மீன்பிடி இறங்குதளம் அருகே கடற்கரையில் கடற் பன்னி ஒன்று இறந்து கரை ஒதுங்கியுள்ளது. கரை ஒதுங்கிய கடற் பன்றி சுமார் 3 அடிநீளமும், சுமார் 100 கிலோ எடை உள்ளது. இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் வசிக்கும் கடல் பன்றி, கடல் சீற்றம்காரணமாக கோடியக்கரை பகுதியில் கரை ஒதுங்கிருக்கலாம் எனத்தெரிகிறது. தவலறிந்த கோடியக்கரை வனச்சரக அலுவலர் பொறுப்பு குமரேசன் கோடியக்கரை வனவர் சதீஷ்குமார் மற்றும் வனத்துறையினர் கடல் பன்றியை கைப்பற்றி கால்நடை மருத்துவரை கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கடற்கரையில் புதைத்து விட்டனர்.

Tags : shore ,river ,
× RELATED உடற்பயிற்சிக்கான தளம் அமைக்கும் பணி ஆய்வு