×

வழிபறியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

காரைக்குடி, நவ.23: காரைக்குடி செக்காலை முதல் வீதியை சேர்ந்தவர் பெரியமீனாள்(35). இவர் கடந்த மே மாதம் தெரிந்த பெண்ணுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் பெரிய மீனாள் கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

இதில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தேவகோட்டை அருகே பனங்காட்டான்வயல் செல்வராஜ் மகன் முத்துராமன் (30), ஆறாவயல் சண்முகம் மகன் பிரேம்குமார்(28) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில் பிரேம்குமார் கரூரில் நடந்த கொலை வழக்கு சம்பந்தமாக திருச்சி மத்திய சிறையில் உள்ளார். முத்துராமனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : hijacking ,
× RELATED ரேஷன் அரிசியை கடத்திய 59 வாகனம் பறிமுதல்; 200 பேர் அதிரடி கைது