கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை

அலங்காநல்லூர், நவ. 23: அலங்காநல்லூர் அருகே, குட்டிமேய்க்கிபட்டி ஊராட்சியில் பொது மருத்துவம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துதுறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவர் வளர்மதி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் விமலாதேவி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை சுகாதார இயக்குனர் அர்ஜூன் குமார் முகாமை தொடங்கி வைத்தார். இதில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனையும் சிகிச்சையும் வழங்கப்பட்டது.

Related Stories: