மதுரை, நவ. 23: மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டவுடன் திருத்தங்களை மேற்கொள்வதற்காக உரிய படிவங்களை வழங்கி, திருத்தங்கள் செய்வதற்காக உள்ள முகாமில், திமுகவினர் செய்து வரும் பணிகளை பார்வையிட்டேன். முகவரி மாற்றம் செய்வது, தவறான வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டியதற்கு உரிய விவரங்களை உரிய படிவங்கள் மூலமாக இங்கு வழங்கினால் உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு சேர்க்கப்படும்; நீக்கப்படும்; இடமாற்றங்கள் செய்யப்படும். அதிமுக அமைச்சர்களுடைய செயல்பாடுகள், சுயநலம் கருதியதாக உள்ளது.