மதுரை, நவ. 23: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது. இதில் மனு கொடுக்க வருபவர்கள், தங்களது பிரச்னை தொடர்பாக ஏற்கனவே மனு கொடுத்து நடவடிக்கை எடுக்காத நிலையில், மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு, தீக்குளிக்க முயற்சிக்கின்றனர். மேலும் மனு கொடுக்க வரும்போது, பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனை கண்காணிக்க கலெக்டர் அலுவலகத்தில் காவல்நிலையம் இல்லை. இதை கருத்திக் கொண்டு, தல்லாகுளம் காவல்நிலையம் சார்பில் கிளை புறக்காவல் நிலையம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விரைவில் திறக்கப்பட உள்ளது.