திருக்கல்யாணம்

சோழவந்தான், நவ. 23: சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு கந்தசஷ்டி விழா கடந்த வாரம் தொடங்கியது. இதில் அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், சூரசம்ஹார விழாவும் நடந்தது. நேற்று முன்தினம் மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் சீர் வரிசையுடன் வந்தனர். அர்ச்சகர்கள் நாகேஸ்வரன் மாப்பிள்ளை வீட்டாராகவும், பிரகாஷ் பெண் வீடாடாராகவும் இருந்து சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று ரவிச்சந்திர சிவாச்சாரியார் பிரசாதம் வழங்கினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுரேஷ்கண்ணன், கணக்கர் வெங்கடேசன் மற்றும் கிருஷ்ணன், நாகராஜ் மணி மற்றும் பிரதோஷக் குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: