திமுகவினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், நவ.23: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை கண்டித்து திண்டுக்கல் திமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு திமுகவினர் பேரணியாக வந்தனர். பின்னர் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், தண்டபாணி, நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டனர்.

Related Stories: