வத்தலகுண்டு, நவ.23: வத்தலக்குண்டு அருகே குளத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். வத்தலகுண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில் வேடகுளம் உள்ளது. இந்த குளத்தின் நடுப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காசிவிஸ்வநாதர் ஆலயம் என்ற பெயரில் சிலர் கோயில் கட்டினர். அக்கோவிலுக்கு செல்வதற்கு மண் போட்டு பாதையும் அமைத்துள்ளனர். இதனால் விவசாயத்திற்கு குளத்தில் தண்ணீர் தேக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். வத்தலக்குண்டு நஞ்சை பட்டாதாரர் சங்கத்தில் புகார் அளித்தனர்.