திருப்பூர், நவ. 23: தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 7 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என திருப்பூரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோம்பைத்தோட்டம் பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமை தாங்கினார். இதில் தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 3.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.