கோவை, நவ. 23: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் நேற்று புதியதாக 154 பேர் பாதிக்கப்பட்டனர். கோவை மாவட்டத்தில் கொரோனாவினால் தினமும் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 200-க்குள் இருக்கிறது. அதன்படி, நேற்று புதியதாக கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 154 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 535-ஆக உயர்ந்துள்ளது. கொேரானாவில் இருந்து நேற்று ஒரே நாளில் 181 பேர் குணமடைந்தனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 216-ஆக உள்ளது.