×

மேலும் 154 பேருக்கு கொரோனா: இருவர் பலி

கோவை, நவ. 23: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் நேற்று புதியதாக 154 பேர் பாதிக்கப்பட்டனர். கோவை மாவட்டத்தில் கொரோனாவினால் தினமும் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 200-க்குள் இருக்கிறது. அதன்படி, நேற்று புதியதாக கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 154 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 535-ஆக உயர்ந்துள்ளது. கொேரானாவில் இருந்து நேற்று ஒரே நாளில் 181 பேர் குணமடைந்தனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 216-ஆக உள்ளது.

தவிர, தற்போது கொரோனா தொற்றினால் கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 720 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 76 வயது மூதாட்டி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 63 வயது மூதாட்டி என இரண்டு பேர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 599ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...