ஈரோடு, நவ. 23: கீழ் பவானி வாய்க்கால் (எல்.பி.பீ.) கொப்பு வாய்க்கால் நீரை தடுக்கும் நபர்க்ள மீது வயல்வரப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். ஈரோட்டில் கீழ்பவானி முறைநீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் காசியண்ணன் தலைைம தாங்கினார். செயலாளர் வடிவேலு முன்னிலை வகித்தார். இதில், பெரும்பள்ளம் கசிவு நீர்திட்ட தலைப்பு பகுதியில் கீழ்பவானி பாசன திட்ட அமைப்பின் ஒழுங்கு முறை விதிகளை பொருட்படுத்தாமல் 2,400 ஏக்கர் பாதிக்கும் வகையில் பெருந்துறை தாலுகா திருவாச்சி கிராமத்திலிருந்து பிரதான வாய்க்கால் 56வது மைலை கடந்து நீரை தவறான முறையில் கொண்டு செல்வதை ரத்து செய்யக்கோரி பாசன அமைப்பு சார்பில் இன்று (23ம் தேதி) ஈரோட்டில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.