மாணவர்கள் அதிவேகமாக ஓட்டிய சொகுசு கார் மோதி தாய், மகன் படுகாயம்

அண்ணாநகர், நவ.22: அண்ணாநகரை சேர்ந்த கவுதம், நேற்று முன்தினம் இரவு தாய் ஜெயாவுடன் பைக்கில் மெட்ரோ ரயில் நிலையம் எதிரே சென்றபோது, அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார், பைக் மீது மோதியதில்,  இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை மடக்கி பிடித்தனர்.

அதில் பெண் உட்பட 4 பேர் இருந்தனர். அவர்களை அண்ணாநகர் போக்கு வரத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதும், பெரிய இடத்தை சேர்ந்தவர்கள்  என்பதும் தெரிந்தது. முக்கிய பிரமுகர் ஒருவர் தலையீட்டால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்ததாக கூறப்படுகிறது.

Related Stories: