அண்ணாநகர், நவ.22: அண்ணாநகரை சேர்ந்த கவுதம், நேற்று முன்தினம் இரவு தாய் ஜெயாவுடன் பைக்கில் மெட்ரோ ரயில் நிலையம் எதிரே சென்றபோது, அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார், பைக் மீது மோதியதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை மடக்கி பிடித்தனர்.