3 நாட்கள் நடக்கிறது இந்திராகாந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

தஞ்சை, நவ. 22: தஞ்சையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தஞ்சை மிஷின் மேட்டு தெருவில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட ஐஎன்டியூசி பொது செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் அன்பரசன், மாநில இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் ராமநாத துளசிய்யா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், பாப்பாநாடு குணா பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அடுத்த சாந்தாங்காடு கிராமத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சாந்தாங்காடு கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீரையன் தலைமை வகித்தார். மூக்கையன், கணேசன், வட்டார தலைவர் அன்பழகன், நகர தலைவர் ரவிக்குமார், மாவட்ட துணைத்தலைவர்கள் ராமசாமி, சக்திவேல் முன்னிலை வகித்தனர். அப்போது இந்திராகாந்தி சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் கலைச்செல்வன் மாலை அணிவித்தார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் முருகையன், கோவிசெந்தில், மாவட்ட சிறுபான்மைத்துறை தலைவர் நாகூர்கனி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: