ராஜபாளையம், நவ. 22: ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் செட்டியார்பட்டி அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில், ராஜபாளையம் தொகுதியைச் சேர்ந்த ஒன்றிய மற்றும் நகர பகுதிகளை சார்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி எம்பி தனுஷ் எம்.குமார், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ, ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தனுஷ்கோடி,
மாவட்ட துணை செயலாளர் இராசா அருண்மொழி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, துணை சேர்மன் துரைகற்பகராஜ், மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, பேரூர் கழக செயலாளர்கள் சிங்கப்புலி அண்ணாவி, இளங்கோவன், ஒன்றிய கவுன்சிலர்கள் கிளை கழக செயலாளர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.