திருப்புத்தூர், நவ.22: திருப்புத்தூரில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அதிமுக சார்பில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. திருப்புத்தூரில் அதிமுக சார்பில் பாக முகவர்களுக்கான கூட்டம் நேற்று விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் சிவமணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். வழக்கறிஞர் அழகர்சாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அதிமுக மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், பாக முகவர்கள் ஆற்றக்கூடிய பணியான புதிய வாக்காளர்களை சேர்ப்பது குறித்தும் மற்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது குறித்தும் பேசினார்.
இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் துவார் மூர்த்தி,காந்தி, முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் பத்மநாபன், சிறுபான்மை பிரிவு பிரேம்குமார், முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் பழனி குமார் நன்றி கூறினார்.