×

விபத்தில் காயமடைந்தவர் சாவு

சிங்கம்புணரி, நவ.22:  சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் வெள்ளியங்குடிபட்டி அழகேசன் மகன் அருண்குமார்(22). டூவிலரில் வந்து கொண்டிருந்தார். இதேப்போல் பொன்னமராவதி பெருமாள்கோயில் பகுதியை சேர்ந்த கணேசன் (55) என்பவரும் டூவிலரில் வரும் போது வெள்ளியங்குடிப்பட்டி விலக்கில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதினர். இதில் கணேசன் இறந்தார். காயமடைந்த அருண்குமார் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Death ,injured ,accident ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...